என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எச். ராஜா"
சென்னை:
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை அமல்படுத்தும் கேரள அரசுக்கு எதிராக காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
முதல்-அமைச்சர் பினராயி விஜயன் இந்துக்களை மதிக்கவில்லை என பிரதமர் மோடி சமீபத்தில் விமர்சனம் செய்தார். தமிழகத்திலும் பா.ஜனதா மற்றும் சில இந்து அமைப்புகள் இதற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் சபரிமலை விவகாரத்தில் கேரள அரசை குறைகூற கூடாது என கூறி இருந்தார். இதை பா.ஜனதாவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார்.
அவரது பதிவில், “சபரி மலையை பொறுத்தவரை கேரள அரசை குறை சொல்லக் கூடாதாம். உச்சநீதி மன்ற தீர்ப்பை நிறைவேற்ற வேண்டுமாம். கமல்ஹாசன் கூறுகிறார். அப்படியானால் 2017-ல் பிரவம் சர்ச் குறித்த தீர்ப்பை பினராயி விஜயன் அரசு ஏன் செயல்படுத்தவில்லை என கேட்கும் துணிவு உண்டா கமலுக்கு? மொத்தத்தில் மக்கள் நீதி மய்யம் இந்து விரோத அமைப்பே”.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். #hraja #kamal #makkalneethimaiyam #sabarimala
மதுரை:
மதுரையில் இன்று 2-வது கட்டமாக வாக்காளர் சேர்க்கை முகாம் நடந்து வருகிறது. அந்தந்த வாக்குச் சாவடிகளில் பொதுமக்களுக்கு உதவும் வகையில், அ.தி.மு.க. நிர்வாகிகள் வாக்குச் சாவடிகள் முன்பு அமர்ந்து பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து வருகிறார்கள்.
காளவாசல், சொக்கலிங்கநகர் வாக்குச் சாவடிகளில் அ.தி.மு.க. வினரின் வாக்காளர் சேர்ப்பு பணிகளை அமைச்சர் செல்லூர்ராஜூ பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற பாராளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் வாக்கு அளிக்க வசதியாக 18 வயது நிரம்பியவர்கள் மற்றும் முகவரி மாற்றம், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்காக தேர்தல் ஆணையம் 4 சிறப்பு முகாம்களை நடத்துகிறது.
இன்றைக்கு 2-வது கட்டமாக வாக்காளர் சிறப்பு முகாம் நடந்து வருகிறது. இதில், இளைஞர்கள், இளம்பெண்கள் ஆர்வமாக வந்து விண்ணப்பித்து செல்கிறார்கள். இது அவர்கள் வாக்களிக்கும் ஆர்வத்தை காட்டுகிறது.
இன்று மனு கொடுத்த இளம்பெண் சுபாசினி, பலமுறை மனு கொடுத்தும் வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இடம் பெறவில்லை என்று தெரிவித்தார். இது போன்ற குறைகள் இனி வரும் காலங்களிலும் ஏற்படாத வகையில், தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு வாக்காளரின் வீட்டுக்குச்சென்று நேரடியாக ஆய்வு செய்து தகுதியான நபர்களை வாக்காளர் பட்டியலில் இடம்பெறச் செய்ய வேண்டும்.
தமிழக முதல்வர் மற்றும் காவல் துறையினரை விமர்சித்து பேசிய கருணாஸ் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டுள்ளார். சட்டம் அனைவருக்கும் சமம். யாராக இருந்தாலும் சட்டம் தனது கடமையை செய்யும். கருணாஸ் எம்.எல்.ஏ. விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்துள்ளது.
பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா விவகாரத்திலும் விரைவில் நடவடிக்கை இருக்கும். முதல்-அமைச்சரின் நடவடிக்கையில் பாரபட்சம் இருக்காது.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மக்களின் உணர்வுகளுக்கு அ.தி.மு.க. அரசு மதிப்பளிக்கும். ஸ்டெர்லைட் ஆலையை மூடும் கொள்கையில் இருந்து சிறிதளவும் பின் வாங்க மாட்டோம். அதில் உறுதியாக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநகர் மாவட்ட நிர்வாகிகள் துரைப்பாண்டியன், தங்கம், வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், சோலை ராஜா, பரவை ராஜா, கருப்பசாமி மற்றும் பலர் இருந்தனர். #ministersellurraju #hraja
பாரதிய ஜனதா கட்சி மோடி தலைமையில் அரசு அமைந்து 4 ஆண்டுகள் நிறைவானதையொட்டி கட்சியின் ஒவ்வொரு நிர்வாகியும், சமுதாய தலைவர்கள், பல துறைகளின் முன்னோடிகள், பிரபலமானர்களை சந்தித்து 4 ஆண்டுகால ஆட்சியின் சாதனை செயல்பாடுகள் குறித்து பேச வேண்டும் என்று தேசிய தலைமையால் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து திருச்செங்கோட்டில் உள்ள அரசியல் சட்ட நிர்ணய சபையின் உறுப்பினராக இருந்தவரும், குழுவின் உறுப்பினருமான காளியண்ண கவுண்டரை சந்திக்க பாரதிய ஜனதாவின் தேசிய தலைவர் எச்.ராஜா திருச்செங்கோடு வந்தார்.
அப்போது எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசுக்கு எதிராக சட்ட விரோதமாக செயல்பட ஊக்கப்படுத்தபடுகிறார்கள்.பொதுவாக மக்கள் போராட்டம் என்றால் அரசு தீர்வு சொன்னவுடன் அடங்கி விடும்.
ஆனால் இவர்கள் ஊடுருவலால் முடிவுக்கு வர வேண்டிய ஜல்லிக்கட்டு, நெடுவாசல் போராட்டங்கள் பெரிதானது. காவல் துறை தலையிட வேண்டிய நிலை உருவானது.
நெடுவாசலை பொருத்த வரை உள்ளூர் மக்களும், மாநில அரசும் ஒப்புக் கொள்ளும் வரை திட்டம் அமல்படுத்தப்படாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. வட நாடு பகுதிகளில் இன்னும் இன்றும் பல இயக்கங்களை சேர்ந்த 30 பேர் போராட்டம் செய்கின்றனர்.
தமிழ்நாட்டில் மணல் கொள்ளை என்பது மிகவும் சீரியசான ஒன்று ஆகும். மணல் அடுத்த மாநிலத்துக்கு அனுமதிக்க கூடாது. இறக்குமதி மணல் கிடைப்பதால் மணல் அள்ள விட மாட்டோம் என்று சட்டம் கொண்டும் வர வேண்டும். 18 அடி வரை மணல் அள்ளினால் தண்ணீர் வந்தாலும் பள்ளத்தில் தேங்கி கடைமடை வரை வராது.
2004-ல் பெட்ரோல் விலை 34 ரூபாய், 10 ஆண்டு தி.மு.க. காங்கிரஸ் ஆட்சியில் 2014ன் படி லிட்டர் 74 ரூபாய் 10 ஆண்டில் 41 ரூபாய் விலை உயர்வு சராசரியாக ஆண்டுக்கு 4 ரூபாய் 4 பைசா உயர்ந்துள்ளது. அதன் பிறகு 4 ஆண்டுகளுக்கு பிறகு 9 ரூபாய் உயர்ந்துள்ளது. சராசரியாக 2 ரூபாய் 10 பைசாதான் உயர்ந்துள்ளது. விலைவாசி கட்டுப்பாட்டில் உள்ளது என்பதற்கு இதுவே ஒரு உதாரணம்.
விலை உயர்வு என்பது பொய் பிரசாரம். பெட்ரோல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர மத்திய அரசு தயாராக உள்ளது. அவ்வாறு வந்தால் டீசல் ரூ.45க்கும், பெட்ரோல் ரூ.55 க்கும் கிடைக்கும் ஆனால் அதை அனுமதிக்க மாட்டோம் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் கூறுகிறார்.
இவ்வாறு எச்.ராஜா கூறினார். #BJP #HRaja
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்